
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிக் கணக்குகள் தொடர்பான பல விதிகளை மாற்ற உள்ளதாகவும், அந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஜனவரி 2025 இந்த முக்கிய அறிவிப்புக்குப் பிறகு, நாட்டின் வங்கித் துறையில் மாற்றம் ஏற்படலாம் மற்றும் மூன்று வகையான கணக்குகள் மூடப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அமல் படுத்தப்பட உள்ள புதிய விதி மூலம், வங்கி அமைப்பை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், திறமையானதாகவும் மாற்றுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாற்றம் வாடிக்கையாளர்களை Digital வங்கிகளை நோக்கி நகர்த்தவும், KYC விவரங்கள் புதுப்பிக்கவும் ஊக்குவிக்கப்படும் என RBI தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதன்படி 2025 முதல் 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி அந்த மூன்று வகையான கணக்குகளைப் பற்றிப் பார்க்கலாம்.
1. செயலற்ற வங்கி கணக்கு நீண்ட காலமாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் 2 ஆண்டுகளாக வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால் அந்தக் கணக்கு செயலற்ற வங்கி கணக்கு எனப்படும். இந்த வகை வங்கிக் கணக்குகள் மூடப்படும்.
2. Inactive Account
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எந்த நடவடிக்கையும் செய்யப்படாத வங்கிக் கணக்குகளின் பிரிவில் செயலற்ற கணக்குகள் அடங்கும். இந்த வகை வங்கிக் கணக்குகளும் ஜனவரி 1 முதல் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. Zero Balance Account
ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு என்பது, நீண்ட காலமாக எந்தத் தொகையும் Deposit செய்யப்படாமல் இருப்பதோடு, அந்த வங்கிக் கணக்கில் இருப்பு பூஜ்ஜியமாக இருக்கும் கணக்கு மேலும் இந்த வகை கணக்கில் எவ்வித Transaction-னும் இல்லையென்றால் கணக்கு முடக்கப்படும். இல்லையெனில் அவற்றிக்கு குறைந்தபட்ச இருப்பத்தொகை கட்டணங்கள் விதிக்கப்படலாம்.