
New tax accounting change: Demand for tax reduction of 5 lakhs, people's expectations are increasing.

மத்திய பட்ஜெட் இன்னும் இரண்டு நாட்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில் செய்யப்படும் அறிவிப்புகள் மக்களை நேரடியாக பாதிக்கும் என்பதால், இது குறித்து பல்வேறு நிபுணர்களும் விரிவாக அலசி ஆராய்ந்து வருகின்றார்கள்!
அத்தியாவசிய பொருட்களின் விலையிலிருந்து வருமான வரி வரை, பட்ஜெட் அறிவிப்புகளின் அடிப்படையில் அனைத்தும் மாறக்கூடும். பொதுவாக, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் எதிர்பார்ப்பது, வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா? என்பதுதான். நாட்டில் தற்போது ஆண்டுக்கு 8 கோடி பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறார்கள். இவர்களில் சுமார் 72% பேர் புதிய வரிக்கணக்கு நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், பழைய வரிக்கணக்கு நடைமுறையில் வருமான வரி உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாகவும், புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமானவரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது. இதனை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில், இன்றைக்குள்ள பணவீக்கத்தை கணக்கில் கொண்டு, 10 லட்சம் ரூபாய் வரை விளக்கு தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
புதிய வரிக்கணக்கு நடைமுறையில் நிலையான Tax deduction 75,000 ரூபாயாகவும் இருக்கிறது. இதனை ஆண்டுக்கு ஒன்று 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பழைய வரி நடைமுறையில் 50,000 ரூபாயாக இருக்கும் வரிபிடிப்பை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. பழைய வரி நடைமுறையில், வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்களுக்கு பிரிவு 80c யின் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விளக்கு வழங்கப்படுகிறது.
இது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாற்றம் அடையாமலேயே இருக்கிறது. இந்த 1.5 லட்சம் ரூபாயை 3 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்த 80c பிரிவின் கீழ் தான் வீட்டுக் கடனுக்காக செலுத்தக்கூடிய அசல் தொகை மற்றும் பிற சேமிப்புகளை குறிப்பிட்டு நாம் வரிவிலக்கு பெற முடிகிறது.
அதேபோல், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செய்யப்படும் பங்களிப்புகளுக்கு வருமானவரி சட்டப்பிரிவின் கீழ், தனி நபர்கள் ஓராண்டுக்கு ₹50000 வரை வரிவிலக்கு பெற முடியும். இதனை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தினால், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கும்!
தொலைபேசி, Laptop, TV போன்றவற்றின் விலை குறைந்தால், விற்பனை அதிகரிக்கும். Digital இந்தியாவும் விரிவடையும். எனவே, பட்ஜெட்டில் இது போன்ற பொருட்களின் விலை குறைக்கப்படுமா என்பதை அனைவரும் அறிய ஆர்வமாக உள்ளனர்!
இவையெல்லாம் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள்! அதே நேரத்தில், சிறு குறு நடுத்தர தொழில்களிலும் பட்ஜெட் கவனம் செலுத்துமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில், நாட்டில் மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குவது சிறுகுறு நடுத்தர தொழில்கள்தான். நாட்டில் மக்கள் பசியின்றி உண்பதற்காகவாவது வழிகாட்டுவது இந்த தொழில்கள்தான்.
எனவே, சிறுகுரு நடுத்தர தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்! வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகளை செய்ய, வரிகளை குறைக்க வேண்டும், சலுகைகள் கொடுக்க வேண்டும் மற்றும் அவர்கள் இங்கே முதலீடுகளை செய்வதற்காக சட்ட திட்டங்களின் கால அளவை குறைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கம் வெள்ளிவிலை தாறுமாறு எகிறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றின் விலை ஓரளவாவது குறையும். ஆனால் பணவீக்கம், அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மக்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்டிருக்கும் திணறல் போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில், கொண்டுவரப்படும் இந்த பட்ஜெட் மக்களுக்கு advantage- ஆக இருக்குமா இல்லை disadvantage-ஆக என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.