
திட்டங்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தல்:
உதாரணத்திற்கு, EQUITY FUNDS – ஐ நீண்டகாலம் வைத்திருந்தால் பலனளித்திடும். ஆனால், குறுகிய காலத்தில் எளிதான ரிட்டர்ன்களை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திடுவர்.
RISK காரணிகளை அறியாமல் முதலீடு செய்தல்:
எல்லா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களுமே ஒருசில ரிஸ்க் காரணிகளைக் கொண்டுள்ளன. ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பு முதலீட்டாளர்கள் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சரியான தொகையை முதலீடு செய்யாமல் இருத்தல்:
சில நேரங்களில், பெரும்பாலும் எந்தவொரு இலக்கோ திட்டமோ இல்லாமல் மக்கள் குத்துமதிப்பாக முதலீடு செய்வதுண்டு. இதுபோன்ற சமயங்களில், முதலீடு செய்த தொகை, விருப்பமான ஆதாயங்களைக் கொடுக்காமல் போகலாம்.
மிகவும் முன்கூட்டியே பணத்தை எடுத்தல்:
சில நேரங்களில், முதலீட்டாளர்கள் பொறுமையிழந்தோ அல்லது ஒரு முதலீட்டுக்குத் தேவைப்படக்கூடிய போதுமான நேரத்தை அளிக்காமல், விருப்பமான ரிட்டர்ன் விகிதத்தை வழங்குவதற்கு முன்கூட்டியே பணத்தை எடுத்துவிடுவதுண்டு.
கூட்டத்தில் ஒருவராகச் சேர்ந்துவிடுதல்:
பெரும்பாலும், முதலீட்டாளர்கள் தனிப்பட்ட தீர்மானத்தை எடுக்காமல், ‘சந்தை’ அல்லது ‘ஊடகத்தில்’ இருந்து பெறப்படும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களைக் கொண்டு தவறான முடிவுகளைச் செய்துவிடுவதுண்டு.
திட்டமே இல்லாமல் முதலீடு செய்தல்:
இது ஒரு பெரிய தவறு. முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு திட்டம் அல்லது இலக்கு இருக்க வேண்டும்.